Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. கொரோனாவின் 2 வது அலை… அதிகரிக்கும் தொற்று….!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 327 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்றுப் பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது அரசு மருத்துவமனை டாக்டர்கள் உள்பட ஒரே நாளில் 327 பேருக்கு தொற்று இருப்பது  சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 981 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 ஆயிரத்து 65 பேர் தொற்றில் இருந்து மீண்டு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில்  ஆயிரத்து 1,794 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |