Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலைக்கு செல்பவர்கள் இனி – வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் அரசின் உத்தரவை கடைபிடிக்காததால் தான் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவ வல்லுநர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

கொரோனா  அதிகரிப்பால் நிறுவனங்களில் பணியாட்கள் குறைக்கப்பட வேண்டும். சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும். ஒன்றாக கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |