தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பெருபாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு எடுக்க கல்லூரிகளுக்கு பேராசிரியர்களை வரம் அழைப்பதாக புகார் எழுந்த நிலையில்,தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஆன்லைனில் பாடம் எடுக்க பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு நேரில் வரவழைத்து கூடாது. கொரோனா சூழலை உணர்ந்து,பேராசிரியர்களுக்கு அடுத்தப் தருவதைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.