Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போன தடவை மாதிரி ஆக போகுது… கொஞ்சம் கூட பயமே இல்ல… தொற்று ஏற்படும் அபாயம்…!!

தாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவை வாங்கி செல்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவினை வாங்கி செல்கின்றனர்.

இப்பகுதியில் கடந்த முறை கொரோனா தொற்று பரவிய சமயத்தில் டாஸ்மாக் கடைகளின் முன்பு சமூக இடைவெளி வட்டங்கள் வரையப்பட்டதால் அதில் நின்று மது பிரியர்கள் மதுவை வாங்கி சென்றனர். ஆனால் தற்போது தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மது பிரியர்கள் கூட்டமாக நின்று மதுவினை வாங்கி செல்வதால் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |