இந்தியாவில் கொரோனா 2 வது அலை பாதிப்பு காணப்படுவதால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனவைரஸ் 2 வது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியமான ஆக்சிஜன் சரிவர கிடைக்காததால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் ஆக்சிஜன் தட்டுப்பாடை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது.
இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதால் பல நாடுகள் இந்தியாவிற்கு உதவி வழங்கி வருகிறது. அந்தவகையில் சவுதி அரேபியா 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் திரவங்களை இந்தியாவிற்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது. மேலும் அதானி குழுமம் மற்றும் லிண்டே நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவிற்கு ஆக்சிஜனை ஏற்றுமதி செய்வதற்கு சவுதி அரேபியா உறுதியாக இருப்பதாக சவுதியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.