வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021 ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே 2 -ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் 72 மணி நேரத்திற்கு முன் ஆர்.டி.பிசிஆர் ( RTPCR) சோதனை செய்திருக்க வேண்டும் அல்லது தடுப்பூசியின் ஒரு டோஸாவது செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.