Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபி அணி மெதுவாக பந்து வீசியதால் …! கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் …!!!

நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி,பவுலிங் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ஆர்சிபி அணி, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச  தவறி விட்டது. இதனால்  பந்துவீச்சிற்கு  அதிக நேரம்  எடுத்துக்கொண்டது. எனவே ஐபிஎல் விதிமுறையை மீறி ,அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக, ஆர்சிபி அணி கேப்டனாக விராட் கோலிக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் நடைபெற்ற போட்டிகளில், சிஎஸ்கே அணி கேப்டன் தோனி ,மும்பை இந்தியன்ஸ் அணி  கேப்டன் ரோஹித் சர்மா  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் ஆகியோர் மீது விதிமுறையை மீறியதாக 12 லட்சம்  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |