மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் மீண்டும் ‘கர்ணன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இணைகிறார்களா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இத் திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து மாரி செல்வராஜூம், தனுஷும் மீண்டும் புதிய படத்தில் இணைகிறார் என்று தகவல் வெளியானது.
அந்த படம் கர்ணன் படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் மீண்டும் உருவாகும் படம் கர்ணன் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வேறு கதை அம்சம் கொண்டதாக இருக்கும் எனவும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.