கூலித்தொழிலாளி 16 வயது சிறுமியை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சந்திரசேகர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சந்திரசேகருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திரசேகர் அந்த சிறுமியின் குடும்பம் வறுமையில் வாடுவதை பயன்படுத்தி அவர்களுக்கு பண உதவி செய்ததோடு, சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி இரண்டாவதாக செய்திருக்கிறார்.
இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல வாரிய அலுவலர் ராணி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அதோடு அந்தச் சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அவரின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் 6 பேர் மீது காவல்துறையினர் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.