தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தருவது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையின் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமே என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், தற்போது ஆலோசனை நடக்கிறது. அதனால் ஸ்டெர்லைட் ஆலை முன்பு 100 க்கும் அதிகமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவடைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை திறப்பது பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Categories
தமிழகத்தில் பெரும் பரபரப்பு…. உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!!
