Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘குடோனில் தீ விபத்து’ 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகின..!!

எம்.ஜி.ஆர். நகரில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.

சென்னை போரூர் எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம்  பகுதியைச் சேர்ந்த விஜய் வேதமூர்த்தி என்பவர் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணம் நிகழ்ச்சிக்கு  தேவையான பொருட்களை கொடுப்பதும், மணமகன் அலங்காரம் செய்யும் தொழிலயையும் செய்து வருகின்றார். இந்நிலையில் விஜய் வேதமூர்த்தி அதே பகுதியில் வெங்கட்ராமன் சாலையில் தனது குடோனில் ஏராளமான  பொருட்களை வைத்திருந்தார். நாளை நடைபெற இருக்கிற ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று இரவு ஊழியர்கள் குடோனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

Image result for எம்ஜிஆர் நகரில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசமானது.

ஊழியர்கள் அனைவரும் வேலை முடிந்ததும் குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். சிறிது நேரத்தில் திடீரென குடோனிலிருந்து கரும்புகை வெளியேறி குடோன் முழுவதும் தீ பரவி எரிந்துள்ளது. இந்நிலையில் தகவல் அறிந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புடைய பொருட்கள் தீயில் கருகின. மேலும் விசாரணையில் மின்கசிவு மூலம் தீ விபத்து நடந்ததாக தெரிந்துள்ளது.

Categories

Tech |