Categories
தேசிய செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை… மீண்டும் செயல்பட தொடங்கியது…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூடப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதிலும் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

டெல்லியில் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூடப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்படத் தொடங்கியது. ஆக்சிஜன் வினியோகம் அதிகரித்ததால் ஆக்சிஜன் குழாய் இணைப்புகள் மறுசீரமைக்கப்பட்ட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் 100 படுக்கைகளும் நிரம்பி விட்டதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |