விவசாயி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது டிராக்டர் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அலமேலுபுரம் பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி மஹாலிங்கம். இவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் பூண்டி மாதா கோவில் அருகில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த டிராக்டர் அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மகாலிங்கத்தின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.