Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளி…. தெருக்களில் சுற்றித் திரிந்ததால் பரபரப்பு…. வழக்குபதிவு செய்த காவல்துறை….!!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருக்களில் சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவர் வீட்டில் தன்னை தனிமைபடுத்தி சிகிச்சை பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருக்களில் சுற்றித் திரிவதாகவும் அதனால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் கொரோனா தொற்று ஏற்பட்ட யாரேனும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருக்களில் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |