செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 985 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 985 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 62 ஆயிரத்து 393 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 895 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8 ஆயிரத்து 186 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.