Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சை பிரிவு மூடல்…. வெளியான தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் இருப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவசர சிகிச்சை மையம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |