நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் லட்சுமி ராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு லோகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோபத்தில் சரண்யா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மனைவியை சமாதானப்படுத்தி லட்சுமி ராஜ் தொண்டாமுத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் லட்சுமிராய் அரிவாளால் சரண்யாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
மேலும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்த சரண்யாவின் கழுத்தை நெரித்து லட்சுமி ராஜ் கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கோட்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்திய போது மனைவியின் மீது சந்தேகப்பட்டு, அதனால் ஏற்பட்ட தகராறில் சரண்யாவை வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.