மந்தமான சென்னை மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை ,131 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது .
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 17 வது லீக் போட்டியில் ,பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம். எ சிதம்பரம் மைதானத்தில், தொடங்கியது . இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பீல்டிங்க்கை தேர்வு செய்துள்ளது.இதனால் மும்பை முதலில் பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது. தொடக்க வீரர்களாக டி காக்-ரோஹித் சர்மா களமிறங்கினர் . இதில் டி காக் 3 ரன்களை எடுத்து வெளியேறினார் .அதன் பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 27பந்துக்களில் ,33 ரன்களை எடுத்து வெளியேறினார். கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி காட்டினார் .அவர் 52 பந்துகளில் 5 பவுண்டரி , 2 சிக்சர்களை அடித்து 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் . அடுத்ததாக களமிறங்கிய ஹார்திக் பாண்டிய 1 ரன் மற்றும் குர்னால் பாண்டிய 3 ரன் எடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் . இறுதி வரை அட்டமிழக்காமல் ,பொல்லார்ட் 12 பந்துகளில் ,16 ரன்களை குவித்தார் .இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை குவித்துள்ளது .132 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் விளையாடி வருகிறது .