ஜெர்மனியில் 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் Mannheim நகரில் கட்டிடப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கட்டிட வேலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 500 கிராம் எடையுள்ள வெடிகுண்டுகளை பணியாளர்கள் எடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் வசித்த 3000 பேர்களை வீட்டை விட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த வெடிகுண்டை செயலிழக்க வைத்ததை தொடர்ந்து மக்கள் தங்களின் வீடுகளுக்கு செல்லலாம் எனவும் தெரிவித்தனர். இதனிடையே அந்த வெடிகுண்டு இரண்டாம் உலகப்போர் போருக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது.