நாடு முழுதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் குறைபாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக மருத்துவமனைகளுக்கு வழங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு கோரியது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்து இருந்தது. இந்நிலையில் ஆக்சிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஆலையை திறக்க கூடாது என தமிழகம் கூறுவது சரியா? என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தும் தலைமை நீதிபதி யோசனை வழங்கியுள்ளார். ஆலையை தாங்கள் ஏற்று நடத்தினாலும் தூத்துக்குடி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருக்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.