Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினா கடற்கரையில் வியாபாரிகள் சாலை மறியல்…. பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் தற்போதைய கடைகளை அகற்றி விட்டு, ஸ்மார்ட் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கடற்கரை சர்வீஸ் சாலைக்கு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட 900கடைகளில் வெளி நபர்களுக்கு 40% கொடுக்கப்பட்டதற்கும் வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |