Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை தமிழகத்தில் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதையடுத்து தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு இதற்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை இங்கு இல்லை என்று பதிலளித்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுவதால் மற்ற மாநிலங்களுக்கு வழங்கினாலும் தமிழ் நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழ்நாட்டில் மருத்துவ பதட்ட நிலை எதுவும் நிலவவில்லை என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |