நாட்டு மக்களுடன் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில் உரையாற்றுகிறார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வானொலியில் உரையாற்றி வருகின்றார். குறிப்பாக மங்கி பாத் நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் ஜம்மு விவகாரம் குறித்து இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் . ஜம்மு விவகாரம் குறித்து மக்களவையில் மோடி கலந்து கொண்ட நிலையில் உள்துறை அமைச்சர் பேசியதை தொடர்ந்தது பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றதால் மோடி பேசவில்லை.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மோடி நேற்று மக்களுடன் வானொலியில் பேசுவார் என்று சொல்லப்படட நிலையில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவையடுத்து அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. எனவே இன்று மக்களுடன் பேசும் பிரதமர், அரசு ஏன் சட்டப்பிரிவை ரத்து செய்தது எதற்கு என்று விளக்குவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகின்றது. ஜம்மு விவகாரம் குறித்து மோடி பேச இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.