ஒரு முனையில் தேசிய கொடி மறுமுனையில் கருணாநிதியின் புகழ் கட்டப்பட்டிருக்குமென்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
சென்னை YMCA மைதானத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து கூறுகையில் , தமிழ்நாட்டில் ராஜாஜி முதல் எடப்பாடி வரை 12 முதல்வருடன் அரசியல் செய்தவர் கலைஞர். அடுத்த வாரம் ஆகஸ்ட் 15 வரப் போகிறது. இந்தியாவின் முதல் அமைச்சர்கள் அவரவர்கள் கோட்டையில் கொடியேற்ற போகிறார்கள். மம்தா பானர்ஜி வங்காளத்திலும் , புதுச்சேரி முதல்வர், பினராய் விஜயன், ஆதித்யநாத் கூட கொடியை ஏற்றுவார். அவர்கள் அனைவரும் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்திவிட்டு , முத்தமிழறிஞர் கலைஞருக்கு வணக்கம் செலுத்த வேண்டும்.
ஏனெனில் அந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர் கலைஞர்.ஆகஸ்ட் 15ம் உரிமை அந்தந்த மாநிலத்தின் ஆளுநருக்கு மட்டுமே கொடியை ஏற்றும் உரிமை இருந்தது. அந்த உரிமையை இந்திரா காந்தியிடம் போராடி பெற்றுக் கொடுத்தவர் கருணாநிதி. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தேசிய கொடியை ஏற்றினாலும் அவர்கள் கலைஞரை நினைத்து பார்க்கவேண்டும்.தேசியக்கொடியின் ஒரு முனையில் கொடி கட்டப்பட்டிருக்கிறது. மறுமுனையில் கலைஞரின் புகழ் கட்டப்பட்டிருக்கிறது இதை மறந்து விட முடியாது என்று தெரிவித்தார்.