25 வருடமாக விவேக்கை நம்பியிருந்த செல் முருகன் வெளியிட்டுள்ள பதிவு காண்போரை கண் கலங்க வைக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக்.சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திரையில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் விவேக்கை நம்பியிருந்தவர்தான் நடிகர் செல் முருகன்.
விவேக் நடிக்கும் பல படங்களில் செல் முருகன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதற்கு விவேக் தான் காரணம். இதேபோல் திரைக்குப் பின்னாலும் விவேக்கை நம்பியே செல் முருகன் இருந்துள்ளார்.
இந்நிலையில் விவேக்கை நம்பி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்த செல் முருகன் இனி என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைத்து மனம் வருந்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு காண்போரை கண்கலங்க வைக்கிறது.