Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மொபட்ல போனவருக்கு இப்படியா நடக்கணும்…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் முதியவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் உசிலம்பட்டியில் போஸ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் மொபட் வண்டியில் தனியாக மேலூருக்கு சென்றுள்ளார். அதன் பின் அவர் தனது வீட்டிற்கு திரும்புவதற்காக வண்ணாம்பாறைப்பட்டி அருகே சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட இவர் படுகாயமடைந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |