Categories
உலக செய்திகள்

மருத்துவமனைக்கு வந்த குடும்பம்…. களைப்பில் தூங்கிய தந்தை…. புகைப்படம் எடுத்த தாய்…. குவியும் பாராட்டுக்கள்….!!

குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த தந்தை தரையில் படுத்து தூங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் சாரா டங்கன் மற்றும் ஜோ டங்கன் என்ற தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். சாரா டங்கன் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் மற்றும் அவரது கணவரான ஜோ ஒரு சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களுடைய இளைய மகளுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சாரா டங்கன் தனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

உடனே ஜோ டங்கன் தனியாக செல்லவேண்டாம் நானும் உடன் வருகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பின் ஜோ தனது வேலையில் இருந்து வீட்டிற்கு வந்து மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்தபின் மருத்துவமனைக்கு ஜோ தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு அவரது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோவுக்கு  பணி சுமையினால் 12 மணி நேர வேலை பார்த்த களைப்போடு மருத்துவமனைக்கு வந்ததால் அசதியில் அவர் மருத்துவமனை வளாகத்தில் தரையிலேயே படுத்து உறங்கியுள்ளார்.

இதனை ஜோவின் மனைவியான சாரா புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். மேலும் அதனுடன் “இந்த வாழ்க்கையை உன்னை தவிர நான் வேரு யாருடனும் வாழ விரும்பவில்லை. நல்ல கணவராகவும் அன்பான அப்பாவாகவும் இருப்பதற்கு நன்றி” என அவர் உருக்கமாக கூறியுள்ளார். இதனையடுத்து பலரும் ஜோவை அவரது தந்தை உணர்வை குறித்து பாராட்டியும் புகழ்ந்தும் வருகின்றனர்.

Categories

Tech |