தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories
BREAKING: முதல்வர் பழனிசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு…!!!
