Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இந்த வழக்குல 3 பேரு சிக்கிருக்காங்க…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. காஞ்சிபுரம் மாவட்டம்….!!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வக்கீல் கொலை வழக்கிற்காக காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த அழகரசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவரும், அவரது நண்பரும் கடந்த 12 ஆம் நாளன்று தேசிய நெடுஞ்சாலையில் தனது கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் 3 மர்ம நபர்கள் வந்து இருவரையும் கத்தியால் சரமாரியாக தாக்கினர்.

இதில் சம்பவ இடத்திலேயே அழகரசன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது நண்பரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காஞ்சிபுரம் காவல்துறையினர் செட்டியார் பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரையும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரையும், கோனேரி குப்பத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |