Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு… ஒரே நாளில் 61 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 61 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 61 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 11 ஆயிரத்து 870 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.  தற்போது மருத்துவமனையில் 441 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |