மதுரையில் கஞ்சாவை விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நவீன யுகத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, புகையிலை போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே இவ்வாறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் செல்லூரிலிருக்கும் காவல் துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அந்த நேரம் அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த 2 வாலிபர்களை விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனால் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.