Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு….? முதலமைச்சர் ஆலோசனை…!!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தலாமா என்று முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நான் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது. பொதுவெளியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும்  தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தலாமா? என்று ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா  இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இரவு நேர ஊரடங்கு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |