Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… சுகாதாரத்துறையினர் தீவிர சோதனை… மீறியவர்களுக்கு அபராதம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 1,450 பேருக்கு முககவசம் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா பரவல் திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் முககவசம் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். சுகாதாரத் துறையினர் கொண்ட குழுக்கள் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமதுகமாலுதீன் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் கூட்டுறவு நகர் பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது முக கவசம் அணியாமல் சென்ற 15 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு இலவசமாக முககவசமும் வழங்கினர். அதேபோல் சுகாதாரத்துறையினர் மாவட்டம் முழுவதும் நேற்று நடத்திய சோதனையில் முககவசம் அணியாமல் மொத்தம் 1,450 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Categories

Tech |