Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்க வீட்டு கதவை ஏன் தட்டுற..? சிறுவன் செய்த வெறிச்செயல்… கைது செய்த காவல்துறை..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டிய வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கீழ்மாத்தூர் நடுத்தெருவில் இளவரசன் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டின் கதவை நள்ளிரவில் தட்டியுள்ளார். அப்போது அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் எழுந்து வந்தார். அதன் பின் கதவை திறந்து எங்கள் வீட்டின் கதவு ஏன் தட்டுகிறாய் ? என்று கேட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த சிறுவன் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வாலிபரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

அதில் இளவரசன் படுகாயமடைந்து அலறினார். அந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து இலவரசன் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |