சிவகங்கையில் கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தந்தை-மகன் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பத்திநாதபுரத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன் என்ற தந்தையும், நவீன் என்ற தம்பியும் உள்ளனர். இவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள பைக்காரா பகுதியில் உள்ள விவேகானந்தா நகரில் வசித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அருகே குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு தந்தை நாராயணன், தம்பி நவீன் ஆகியோர் மோட்டார் சைக்கிளிலும், மகன் நாராயணன் காரிலும் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
படமாத்தூர் விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. மேலும் அந்த கார் அங்கிருந்து நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை நாராயணன், மகன் நவீன் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.