Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளைக்கு அப்புறமா இது வந்திருக்கு…. வனத்துறையினர் அறிக்கை…. தேனி மாவட்டம்….!!

தேனியிலிருக்கும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கும்பகரை அருவி உள்ளது. இந்த அருவியில் வரும் நீரின் வரத்தைப் பொருத்து சுற்றுலா பயணிகளும், அப்பகுதியிலிருக்கும் பொது மக்களும் அதில் குளிப்பார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழைப்பொழிவு இல்லை.

இதனால் அருவிகளில் நீர்வரத்து குறைவாக தான் காணப்பட்டது. இந்த நிலையில் தேனியில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை அருவியில் குளிப்பதற்கு தடை விதித்தனர்.

Categories

Tech |