விந்தனு பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆண் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் ஒரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டில் கொரோனா ஊரடங்கால் விந்தணு தானம் செய்பவர்கள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் தேவையான சேமிப்பு விந்தணுக்களில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் குறைந்த அளவிலான நன்கொடையாளர்கள் தானம் செய்துள்ளதால் மருத்துவமனைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விந்தணு பற்றாக்குறை ஏற்பட்டதாக பல்கலைக்கழக மருத்துவமனையின் இனப்பெருக்க பிரிவின் தலைவர் கூறியுள்ளார்.
இதனால் Assisted Pregnancyயை நம்பி இருக்கும் தம்பதிகள் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டிய பெண்கள் தற்போது 30 மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனையில் இந்த முறை கர்ப்பம் தரித்தளுக்கு 12,000 டாலர்கள் செலவாகும். இது அனைவருக்கும் கட்டுப்படியாகாது என்பதால் அனைவரும் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். இதில் 50 ஆண்களில் பாதி பேர் மட்டுமே நன்கொடையாளராக இருக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். இதனால் ஆண் நன்கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.