தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அச்சன்கோவில் ஐயப்ப சன்னதியில் விஷு கனி தரிசனம் நடந்தது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கேரளா மாநிலம் முழுவதும் நேற்று விஷு கனி தரிசனம் சிறப்பாக நடந்தது . அவ்வகையில் அச்சம்கோவிலில் இருக்கும் ஐயப்பன் ஆலயத்திலும் விஸு கனி தரிசனம் நடந்தது . இதனால் கணபதி ஹோமம், கலச பூஜை போன்றவை அதிகாலையில் கோவிலில் நடந்தது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் விஷுக்கனி தரிசனம் கிடைக்கப்பெற்றது.
பின்னர் எப்பொழுதும்போல் கோவிலில் அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் இ- பாஸ் பெற்றுக்கொண்டு, நேரடியாக பங்கேற்று தரிசனம் பெற்று மகிழ்ந்தனர். விழா ஏற்பாடுகள் கமிட்டி தலைவரான ஹரிஹரன் மற்றும் நிர்வாக அதிகாரி லால் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது .