Categories
தேசிய செய்திகள்

இந்த மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை…. மத்திய அமைச்சர் எச்சரிக்கை….!!!

கொரோனா பாதிப்பு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் எச்சரித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மருந்தை செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட செய்து கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரித்துள்ளார். மேலும் இந்த மருந்து தயாரிப்பை அதிகப் படுத்தும் படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |