Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு… 144 தடை உத்தரவு அமல்… கடும் கட்டுப்பாடுகள்…!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது.

அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலத்த கட்டுப்பாடுகளுடன் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளியில் நடமாடும் மக்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் நம் மாநிலத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப பேருந்துகளில் முந்தியடித்துக் கொண்டு செல்கிறார்கள். அதுமட்டுமன்றி ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |