Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்… இதை கட்டாயம் கடைப்பிடிக்கணும்… மீறினால் அபராதம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை காவல்துறையினர் மற்றும் நகராட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10-ம் தேதி தலா ரூ.200 வீதம் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 166 பேரிடம் ரூ.33 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

அதே போல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 8 பேரிடம் தலா ரூ.500 வீதம் 4 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மொத்தம் 174 பேரிடமிருந்து ரூ. 37,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |