மகாராஷ்டிராவில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் அம்மாநில அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முக்கியமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க அம்மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் அமல் படுத்தி வருகின்றது.
மகாராஷ்டிராவில் நாள்தோறும் 50,000 முதல் 60000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் அம்மாநிலத்தில் உள்ள மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இதன் காரணமாக கடந்த ஐந்தாம் தேதி முதல் அந்த மாநில அரசு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தியது. இந்நிலையில் இன்று முதல் இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.