Categories
உலக செய்திகள்

3 வெறும் நிமிசத்துல… கொரோனாவை ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்… வித்யாசமான செயலியை கண்டுபிடித்த நிறுவனம்…!!!

கொரோனா தொற்றை கண்டறிவதற்கு ஜெர்மனியில் செயல்பட்டு வரும் நிறுவனம் புதிய செயலி ஓன்றை உருவாகியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெரும் தொற்றாக மாறி வருகிறது. இத்தகைய கொடிய நோயை கண்டறிய பல வித சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியில் செயல்பட்டு வரும் ஆப் டெவலப்மென்ட் நிறுவனம் கொரோனாவை கண்டறிவதற்கு ஒரு புதிய செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலிக்கு Semic EyeScan என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த செயலியை பயன்படுத்தி கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் நம் கண்களில் விழிப்படலத்தில் உள்ள லட்சக்கணக்கான இளஞ்சிவப்புகளில் கொரோனாவினால் ஏற்பட்டிருக்கும் இளஞ்சிவப்பு அலர்ஜியை கண்டறிந்து கொரோனவை உறுதி செய்ய  முடியும். இந்த செயலியின் முடிவுகள் 95% சரியாக உள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 3 நிமிடம் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |