பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை சளி மாதிரிகள் 95 ஆயிரத்து 406 பேருக்கு எடுக்கப்பட்டது. அதன் பின் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 351 பேருக்கு நேற்று மட்டும் சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 350 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் 3 பேருக்கு பெரம்பலூர் வட்டாரத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றிற்கு 33 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சுமார் 23 ஆயிரம் பேருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.