பிரிட்டனில் அடுத்தக்கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் அடுத்தக்கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு காரணம் தடுப்பூசிகள் மட்டுமல்ல நிச்சயமாக அதன் பெரும் பங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தான் என தெரிவித்துள்ளார். இதனிடையே தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் அதிக கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் அதனை உணர்ந்து முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பொது நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மக்கள் விழிப்புணர்வுடனும், சமூக சிந்தனையுடனும் செயலாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தளர்வுகளில் எந்த மாற்றங்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.