பிரிட்டனில் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொரோனாவிற்கு எதிராக முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 50 வயதுக்கு அதிகமான நபர்கள் இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசியை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பிரிட்டன் அரசு, கலப்பு தடுப்பூசிக்கான ஆராய்ச்சியை விரிவுபடுத்தி இருக்கிறது.
அதன்படி ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியை, முதல் டோஸாகவும், வேறு ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியை இரண்டாம் டோஸாகவும் செலுத்தப்பட்டு, அதற்குரிய பலனை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவ்வாறு தடுப்பூசிகளை கலப்பதன் மூலம் வைரஸிற்கும், அதன் உருமாற்றத்திற்கும் எதிராக அதிக காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்றும் தடுப்பூசி திட்டத்தை மேலும் எளிமையானதாக மாற்றும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் அஸ்ட்ராஜெனகா, பைசர் தடுப்பூசிகளை முதல் டோஸாக செலுத்திக்கொண்ட 50 வயதிற்கு அதிகமான நபர்கள், Combined Vaccine ஆராய்ச்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இந்த நபர்களுக்கு இரண்டாவதாக செலுத்தக்கூடிய தடுப்பூசி அதே மருந்தாகவோ அல்லது மாடர்னா, நோவாவாக்ஸ் தடுப்பூசியாகவோ இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வில் 800க்கும் அதிகமான நபர்கள் ஏற்கனவே கலந்துகொண்டு வருகிறார்கள். இதற்கான முதற்கட்ட முடிவுகள் அடுத்த மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.