Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இவர்களின் பங்கு வரலாற்றில் என்றுமே மறக்க முடியாது”… பட்டமளிப்பு விழாவில் பாராட்டு..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் ஆகியோர் சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் படித்த 300 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2012-ஆம் ஆண்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. இதுவரை 300 பேர் ஐந்து ஆண்டுகள் படித்து முடித்து பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து சென்றுள்ளனர். தற்போது கடந்த 2015-ஆம் ஆண்டில் நான்காவது பேட்ஜாக மருத்துவ படிப்பில் 49 பெண்கள், 51 ஆண்கள் பட்டம் பெற்றுள்ளனர்.

இந்தோ-பாகிஸ்தான் சண்டை மற்றும் சீனாவுடன் நடந்த யுத்தம் ஆகியவற்றின் போது காயமடைந்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள் பெரும் உதவியாக இருந்தனர். ஆனால் இந்த மாணவ-மாணவிகளுக்கு இவை அனைத்தையும் விட வரலாற்றில் என்றுமே இடமுண்டு. ஏனென்றால் கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்திய ஒன்றாகும். அந்த வைரஸ் தாக்கியவர்களை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்ததில் இவர்களுக்கு அதிக அளவில் பங்கு உள்ளது. இவர்களின் பங்கு வரலாற்றில் என்றுமே மறக்க முடியாது என்று அவர் கூறினார்.

Categories

Tech |