Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நான் சண்டை போட்டா உனக்கு என்ன…. ஆத்திரமடைந்த அண்ணனின் வெறிச் செயல்…. தம்பிக்கு ஏற்பட்ட விபரீதம்…!!

சேலம் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் அண்ணன் தம்பியை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி  சத்தியமூர்த்தி, மார்க்கண்டன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்தமகன் சத்தியமூர்த்தி குடித்துவிட்டு  வீட்டிற்கு வந்து அவரது தந்தை சடையனிடம் தகராறு செய்துள்ளார். இதனைப் பார்த்த இளைய மகன்  மார்க்கண்டன் அப்பாவிடம் எதற்கு சண்டை போடுகிறாய் என்று சத்தியமூர்த்தியிடம் விவாதம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து மார்கண்டனின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார். இதில் காயமடைந்த மார்க்கண்டனை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுக்குறித்து காவல் துறையினர் சத்தியமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து  தலைமறைவான சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.

Categories

Tech |