மதுரையில் சித்திரைத் திருவிழாவை நடத்த வேண்டும் என்று கூறி தமுக்கம் மைதானத்தில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டிருந்த காரணத்தினால் எந்த கோயில்களிலும் திருவிழா நடத்தப்படவில்லை.
சமீபத்தில் சற்று குறைந்து இருந்த தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்துக் கொண்டு வருவதால் இந்த ஆண்டும் எந்தவித திருவிழாவையும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் மதுரையில் சித்திரை திருவிழாவை நடத்த வேண்டும் என்று கூறி தமுக்கம் மைதானத்தில் கொட்டும் மழையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவிழாவை நடத்த கோரி நாட்டுப்புற கலைஞர்களும் மனு அளித்துள்ளனர்.