இரத்தசோகையை நீக்க உதவும் சுவையான முருங்கை இலை சூப் செய்யலாம் வாங்க..
தேவையானப் பொருட்கள்:
முருங்கை இலை- 1 கப்
தண்ணீர்-2 கப்
சிறிய வெங்காயம்-10
தக்காளி-1
இஞ்சி துருவியது- 1 டீ ஸ்பூன்
பூண்டு விழுது- – 1 டீ ஸ்பூன
சீரகம்-1/2 டீ ஸ்பூன்
மிளகு தூள்-1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை
நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை :
முதலில் முருங்கை இலைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் சீரகம் , வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் , முருங்கை இலைகளை சேர்த்து கிளறி உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான முருங்கை இலை சூப் தயார் !!